Ambagarathur Association UAE

News

view:  full / summary

Koottu kurbani

Posted by Nizar on August 11, 2014 at 1:40 AM Comments comments (0)

எனது அருமை சகோதர்களே !

அமீரக வாழ் அம்பகரத்தூர் நண்பர்கள் அனைவர்களுக்கும். அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்;). இன்ஷா அல்லா வருகின்ற ஈதுல் அல்ஹா பெருநாள் அன்று நாம் அனைவரும் ஒரு மனதாக சேர்ந்து ஒவ்வருவரும் ஒரு மாட்டு குர்பானி பங்க் கொடுக்கலாம் .அந்த இறைச்சியை நமதூர் முழுவதும் பகிர்ந்து கொடுக்கலாம் . இதில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து கொள்ளும் மாறு கேட்டு கொள்கின்றோம் இதற்க்கான தொகை பின்பு அறிவிக்கபடும் , அல்லாஹ் உங்களுக்கு நல் அருள் புரிவானாக அமீன் !

தொடர்புகளுக்கு:

MD. அன்சாரி. 050-3478638

A. நிஜாருதீன். 050-8065040

A.J. சாகுல் ஹமீது 055-7442800

A.M. மஹபூப் அலி 050-5090989

N. கைசர் பாபு 050-4229071

H. ஹஜ்ஜி முஹம்மது. 0507682713

VAFATH SEITHE

Posted by Nizar on July 12, 2014 at 3:50 PM Comments comments (0)

வபாத் சொய்திகள்

இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜீஹூன்.

 

நமதூர் மொயின்ரோடு (மிட்டாய் கார வீடு மர்ஹூம். அப்துல் அஜீஸ் அவர்களின் மணைவியும் சிராஜுதீன் அவர்களின் அம்மாவும் ஆகிய அம்ஷாகனீ அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்.

 

Quran: 42:40

Posted by Nizar on January 5, 2014 at 1:15 AM Comments comments (0)

பழிக்குப் பழியை விட, மன்னிப்பு இறைவனிடத்தில் மிக உயர்ந்தது!

 

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை;) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ, அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன்: 42:40)

Parliment Attak

Posted by Nizar on July 21, 2013 at 4:50 PM Comments comments (0)

பூனைக் குட்டி வெளியேவந்தது..... இந்தியன் முஜாஹிதீன் ரகசியம் அம்பலமானது....... செட்டப் செய்த நாடகங்களின் மூலம் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த காங்கிரஸ் & பிஜேபி அரசுகளின் தேசத்துரோகமும் வெளியானது.....

 

inneram.com

நாடாளுமன்றத் தாக்குதல், 26/11 மும்பைத் தாக்குதல் பின்னணியில் அரசா? - அதிர்ச்சித் தகவல்!

 

புது டெல்லி : இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ மற்றும் ஐபி-க்கு இடையே நடைபெறும் மோதலில் புதிய திருப்பமாக நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை 26/11 தாக்குதல் ஆகியவற்றை இந்திய அரசே நடத்தியது என்று சிபிஐ அதிகாரி தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அரசின் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்துறை அமைச்சகத்தின் செயலர் மணி, இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலும் இந்திய அரசாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று இஷ்ரத் ஜஹான் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வு அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

 

தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை எதிர்ப்பின்றி கொண்டு வரவே மத்திய அரசு இத்தகைய தாக்குதல்களை நிறைவேற்றியதாக சதீஷ் வர்மா கூறியதாக மணி கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற (13.12.2001)ஒரு சில தினங்களிலேயே பொடா சட்டமும் மும்பை தாக்குதல் (26.11.2008) நடைபெற்ற உடன் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டமும் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இஷ்ரத் ஜஹானுடன் கொல்லப்பட்ட மூவரும் லஷ்கர் தீவிரவாதிகள் எனும் ஐபி-யின் அறிக்கை பொய்யானது என்று சதீஷ் சர்மா கருதியதாகவும் மணி கூறினார். இஷ்ரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பாக உள்துறை தயாரித்த அறிக்கையானது சர்ச்சைக்குரிய ஐபி அதிகாரி ராஜேந்தர் குமார் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்று சர்மா கருதியதாகவும் மணி தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஐபி அதிகாரி ராஜேந்தர் குமாருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர முடிவானதும், உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டால் அம்முயற்சி நிறுத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஐபிஎஸ் கேடர் அதிகாரியான சதீஷ் வர்மா சிபிஐ சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து நீக்கப்பட்டு ஜுனுகாத் காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக தற்போது இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Anna Hazare

Posted by Nizar on July 21, 2013 at 4:45 PM Comments comments (0)

பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது!

 

அண்ணா ஹசாரே பேட்டி!!

 

நரேந்திர மோடி, "மதவெறியர்" என்றும், பாஜக மதவெறிக் கட்சி என்றும் கடுமையாக சாடிய அண்ணா ஹசாரே,

இவர்களின் மதவெறியால் இந்திய தேசம் துண்டு துண்டாக உடைந்து சிதறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது, என்றார்.

 

தான் ஒருபோதும், மோடியை மதச்சார்பற்றவர்-நேர்மையானர் என்று சொல்லவில்லை, குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்காத மோடியை நான் எப்படி நேர்மையானர் - மதசார்பற்றவர் என்று சொல்ல முடியும்? எனக் கேள்வி எழுப்பினார், ஹசாரே.

 

முன்னதாக, நேற்று (19/07) இந்தூரிலிருந்து வெளியாகும் காலைப் பத்திரிகை ஒன்றில், மோடி நேர்மையானர் என அண்ணா ஹசாரே நற்சான்று வழங்கியதாக கூறப்பட்டிருந்தது.

 

இந்த செய்திக்கு உடனடி "மறுப்பு" கொடுப்பதற்காக, டெல்லி மருத்துவமையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஹசாரே, அவசரம்-அவசரமாக நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

நரேந்திர மோடி மதச்சார்பற்றவர் என்று தான் ஒருபோதும் சொல்லவில்லை, அவரது மதவெறிச் செயல்களுக்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் இல்லை என்று தான் தெரிவித்திருந்தேன்.

 

எனது கருத்து திருத்தி போடப்பட்டுள்ளது, என தெரிவித்த அவர், நரேந்திர மோடி தலைமை தாங்கும் பாஜக, ஒரு மதவாதக் கட்சி என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாக தெரிவித்தார்,ஹசாரே.

 

ஒரு கட்சி தனது கொள்கைகளை சொல்லுவதை வைத்தும், செயல்படுத்துவதை வைத்தும், அந்தக் கட்சி மத சார்பற்ற கட்சியா? மதவாதக் கட்சியா? என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும், என தெரிவித்த அவர்,

சந்தேகமின்றி, பாஜக ஒரு சமூகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக சொன்னாலும், மற்றொரு சமூகத்துக்கு எதிராக செயல்படும் மதவாதக் கட்சி என்றார், அண்ணா ஹசாரே.

 

இவர்களின் மதவாதத்தால், இந்திய தேசம் தேசம் துண்டு துண்டாக சிதறி, சின்னாபின்னமாகப் போவதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

 

Frence Indipendence Day

Posted by Nizar on July 21, 2013 at 4:40 PM Comments comments (0)

Karaikal to Peralam Train Rout

Posted by Nizar on July 21, 2013 at 4:40 PM Comments comments (0)

Karaikal News

Posted by Nizar on July 21, 2013 at 4:30 PM Comments comments (1)

Karaikal News

Posted by Nizar on July 21, 2013 at 4:30 PM Comments comments (0)

Ramadan Mubarak

Posted by Nizar on July 21, 2013 at 4:20 PM Comments comments (0)

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பிற்கினிய அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கும் அவர்தம் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சங்கைமிகு ரமலான் மாதத்தின் அருட்கொடைகளை வல்லோன் அல்லாஹ் அருளட்டுமாக.ஆமீன்.


Rss_feed