|
|
இன்ஷாஹ் அல்லா கடந்த வெள்ளிகிழமை அன்று சத்வா துபாயில் அம்பாகரதூர் அசொசியசெனின் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் அதனுடன் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையும் இனிதே நடந்து முடிந்தது. அப்பொழுது தலைவர் அவர்கள் கடந்த ஆண்டில் நாம் செய்திருந்த நல்லகாரியங்களை ஒருமுறை நினைவுகூர்ந்து, இனிவரும் காலங்களின் நமது சேவை அனைவருக்கும் உபயோகம் இருக்குமாறு அமையவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்கள். இந்தவருடம் நமது ஊரில் இஹ்திகாப் இருக்கும் நன்ம்பர்களுக்கு அருள்மறையாம் திருமறையை வழங்குவது என்றும், நமது ஊர் பள்ளிவாசல்களின் இமாம்கள், மோதினார்பாய், கணக்குபிள்ளை மற்றும் பக்கிர்சபாய் ஆகியோருக்கு கடந்த ஆண்டு செய்ததுபோல் இந்தவருடமும் அன்பளிப்பு வழங்குவது என்று அனைவரும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியும், ரமலான் நல்வாழ்த்துக்கள் அம்பாகரதூர் சார்பாக தெருவித்துகொள்கிறோம்.
Categories: None
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.